Thursday, 25 February 2016

கணினி

கணினி
    இன்றைய நவீன காலத்தில் கணினி உலகையே சுருக்கிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. மின்னஞ்சல், இணையம் என்பதன் வழி உலகின் எந்த மூலையையும் நாம் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். நம் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணினியின் மூலம் அவர்கள் முகத்தைப் பார்த்து, நேரடியாக உரையாட முடியும். இணையத்தின் வழி எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். இது, மாணவர்கள் மட்டுமன்றி, எல்லாத் துறையினருக்கும் பெரும் பயனாய் அமைகிறது.
         அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின்  விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது. தனக்கு வேண்டிய தவகல்களை உடனே தர கணினியால் மட்டுமே முடியும். மேலும், தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ள கடவுச்சொல்லையும் கணினியில் வைத்துக் கொள்ளலாம். இதன்  மூலம் மற்றவர்கள் தவகல்களைத் திருடுவது கடினமாகும்.

        கணினியின் பயனை வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால் அளப்பது போன்றதாகும். எந்தத் துறையால் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது. எனினும், நாணயத்திற்கு உள்ள இரு பக்கங்களைப் போல் கணினிக்கும் தீமை என்ற மறு பக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே, நன்மையை மட்டுமே நாடினால் எதுவுமே நன்மையாகத்தான் முடியும்.

No comments:

Post a Comment